அமெரிக்க ‘எஸ்கொயர்’ இதழ் உலக அளவில் நடத்திய ‘கவர்ச்சிக் கன்னி’ போட்டியில் ஆஸ்திரேலிய அழகி மிராண்டா கெர் தேர்வாகியுள்ளார். ஆண்கள் பேஷன், மாடலிங் விஷயங்களுடன் உலகின் பல நாடுகளிலும் வெளிவரும் அமெரிக்க மாத இதழ் ‘எஸ்கொயர்’. சுமார் 80 ஆண்டு பாரம்பரியம் கொண்டது.
உலகிலேயே கவர்ச்சியான பெண் யார் என்ற தலைப்பில் இந்த இதழ் ஆண்டுதோறும் தனது வாசகர்களுக்கு போட்டி நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெறுவது ஒரு கவுரவமாக கருதப்படுகிறது. உலக புகழ் பெற்ற மாடல் அழகிகள் ஏஞ்சலினா ஜூலி, ஸ்கார்லட் ஜோகன்சன், ரிகானா உள்ளிட்டோர் இதில் வெற்றி பெற்றவர்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டியை எஸ்கொயர் இதழ் சமீபத்தில் நடத்தியது. இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி மிராண்டா கெர் (29) அதிக ஓட்டுகள் பெற்று ‘கவர்ச்சிக் கன்னியாக’ தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருமணமான மிராண்டாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தன் முகம், கூந்தல், மேனி பளபளப்புக்கு காரணம் தேங்காய் எண்ணெய்தான். கிரீன் டீ, சாலட் மற்றும் உணவுகளில் தினமும் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக