ருபேஷ் பால் இயக்கத்தில் உருவாகப் போகும்
புதிய காமசூத்ரா படத்தின் முதல் ஸ்டில் வெளியாகியுள்ளது. 3டி படமாக
உருவாகும் இதில் காமசுந்தரியாக நடிக்கப் போவது ப்ளே கேர்ள் ஷெர்லின்
சோப்ரா.
சர்வதேச சினிமா சந்தையைக் குறி வைத்து இந்தப் படத்தை உருவாக்கப் போகிறாராம் ருபேஷ் பால்.
ஆங்கிலத்தில் இந்தப் படத்தை உருவாக்கவிருக்கும் ருபேஷ், நாயகியாக ஷெர்லின் சோப்ரா எனப்படும் மோனா சோப்ராவை புக் செய்துள்ளார்.
ப்ளே பாய் பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ்
கொடுத்த முதல் பெண் என்ற பெருமையைக் கொண்டவர் ஷெர்லின். கவர்ச்சிக்கும்,
நிர்வாணத்திற்கும் பெயர் போனவர். பாடகியாக, மாடலாக, நடிகையாக வலம் வருபவர்.
இப்படத்தில் ஷெர்லின் காட்டப் போகும்
கவர்ச்சிதான் பிரதானமாக இருக்கும் என்றாலும் கூட நசிருதீன் ஷா, மிலிந்த்
சோமன், ரந்தீப் ஹூடா ஆகியோரும் நடிக்கவுள்ளனராம்
பெண்களை 30 வகையாகப் பிரித்து
ஒவ்வொருவரையும் எப்படிக் கவர வேண்டும், எப்படி திருப்திப்படுத்த வேண்டும்,
எப்படி அணுகினால், செயல்பட்டால் அவர்களைத் திருப்திப்படுத்த முடியும்
என்பதைச் சொல்லும் சூத்திரம்தான் இந்த காமசூத்திரா. 14ம் நூற்றாண்டில்
வாத்ஸாயனர் எழுதியது இந்த காமசூத்திரம்.
கருத்துரையிடுக