காட்டாற்று வெள்ளம் போலத்தான் செக்ஸ் உறவும். எப்போது தொடங்கும், எங்கு
முடியும், எப்படிப் போகும் என்று யாருக்கும் தெரியாது. உறவில் புகுந்து
விட்டால் போகிற பக்கமெல்லாம் நம்மையும் இழுத்துக் கொண்டு ஓடும்.
அப்படிப்பட்ட சமயத்தில் கட்டுப்பாடு, நினைவு, சமயோசிதம், சாதுரியம்
என்பதெல்லாம் சற்றே தூர விலகிப் போய் விடும். மனசு முழுவதும் இன்பமும்,
மகிழ்ச்சியும் மட்டுமே பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டிருக்கும்.