தைமாத மேகமெனத்
தவழ்ந்தாடும் பூங்கொடியே!
கையோடு நீ இணைந்தால்
கற்பனைகள் ஊறுமடி!
முக்காடு நீக்கியுந்தன்
எக்காடு சென்றாலும்
ஏக்கமெனக் கில்லையடி
பூக்காட்டுக் கூந்தலினைப்
புறமெடுத்து முத்தமிட்டால்...
சாக்காடு வந்தாலும்
சஞ்சலமேன் கூடுமடி!
பொன்னிழைத்த மெல்லிடையை
பொருந்த அணைத்துவிட்டால்
கண்ணிழைத்த பாவமெல்லாம்
கரைந்து போகுமடி
கல்வாழை இலைகளெனக்
கழைந்திருக்கும் கன்னமெல்லாம்
கொல்வாளைப் போலெழுந்து
கொடுமைகள் செய்யுதடி!
காதலியே! எந்தன்
கற்பனையின் நீரூற்றே!
போதை புலம்புதடி
பொருளுரைக்க வில்லையடி!
ஊர் பேரறியாமல்
உயிர் கொடுத்த பைங்கிளியே!
ஊமை மனதுமட்டும்
உனைத்தேடி வாடுதடி!
கருத்துரையிடுக