நியூயார்க்கில் நடந்த விக்டோரியாஸ் சீக்ரெட் ஏஞ்சல் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட பிரேசில் நாட்டு மாடல் அழகி அலெசான்ட்ரா அம்ப்ரோசியா ரூ. 13.59 கோடி மதிப்புள்ள பேன்டசி பிராவை அணிந்து வந்து பூனை நடை போட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.
விக்டோரியாஸ் சீக்ரெட் ஏஞ்சலின் பிரா மற்றும் பாண்டீஸ் கண்காட்சி நியூயார்க்கில் நடந்தது. இதில் ஏகப்பட்ட பிரபலங்கள், அழகிகள், மாடல்கள் கலந்து கொண்டு கவர்ச்சி நடை போட்டு கலக்கினர். ஆனால் அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிட்டவர் அலெசான்ட்ராதான். காரணம் அவர் அணிந்து வந்த கவர்ச்சி உடை அல்ல, மாறாக போட்டிருந்த பிராதான்.
படு கவர்ச்சிகரமான அந்த விக்டோரியா சீக்ரெட் ஏஞ்சல் பேன்டசி பிரா மீது வைத்த பார்வையை விலக்க முடியாமல் அத்தனை பேரும் நிலைகுத்திப் போய் நின்று விட்டனர். அந்தப் பிராவுக்கு அத்தனை கவர்ச்சியா என்று மிரள வேண்டாம்… அந்த பிராவின் மதிப்புதான் அவ்வளவு பெருசு.
அலெசான்ட்ரா போட்டு வந்த பிராவின் விலை என்ன தெரியுமா… ஜஸ்ட் ரூ. 13 கோடியே 59 லட்சம்தானாம். பல்வேறு வகையான விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட படு காஸ்ட்லியான பிரா அது. வைரம், ரூபி, சபையர், அமெதிஸ்ட் என பலவகையான கற்களைக் கொண்டு இந்த பிரா உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5200 கற்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளதாம். ஒரு பூ போல இந்த பிராவை வடிவமைத்துள்ளது விக்டோரியா.
ஆண்டுதோறும் இந்த பேன்டசி பிராவை விதம் விதமாக வடிவமைத்து களம் இறக்குகிறது விக்டோரியா. இந்த முறை இதை கற்களால் கலக்கலாக வடிவமைத்துள்ளனர்.
சக மாடல் அழகிகளே கூட அலெசான்ட்ராவின் மார்புகளில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்த அந்த பிராவையே உற்றுப் பார்த்தனர்.
பிரா மட்டுமல்ல, அதை அணிந்து வந்த அலெசான்ட்ராவும் படு அழகானவர்தான். 31 வயதான அவருக்கு கடந்த மே மாதம்தான் குழந்தை பிறந்தது. இருப்பினும் படு வேகமாக தனது பழைய கவர்ச்சிக்கு அவர் மாறி விட்டார்.
இந்த காஸ்ட்லியான பிராவை அணிந்து வந்ததைப் பெருமையாக கூறினார் அலெசான்ட்ரா. கடந்த ஆண்டு இந்த பிராவை ஆஸ்திரேலியாவின் மிராண்டா அணிந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்
கருத்துரையிடுக