Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

செக்ஸ் இன்பம் உங்களுக்குள் அதிகம் வேண்டுமா ?

maxresdefault2-300x162-615x332 
பெரும்பாலும் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணமாய் இருப்பது, ஒருவரின் பேச்சை, மற்றொருவர் கேட்காமல் இருப்பது தான். இதில், சிலருக்கு ஈகோ வேறு ஏற்படும். “நீ என்ன சொல்றது, நான் என்ன கேக்குறது…”. இந்த அடிப்படை விஷயத்தில் ஒத்துப் போனாலே போதும். உங்கள் உறவில் அதிகமாக சண்டை, சச்சரவுகள் ஏற்படாது.


ஒரு சில தம்பதிகள், அவர்களது துணைக்காக, தங்களது சொந்த விருப்பு, வெறுப்புகளை மாற்றிக்கொள்வார்கள். இது, ஆரம்பத்தில் சந்தசமாக இருந்தாலும். என்றாவது சண்டை வரும் போது, “உனக்காக நான் இதெல்லா பண்ணேன், நீ மொத்தமா மறந்துட்ட.. யூ ஆர் ச்சீட்.. ஷிட்” என்று தாட்டு பூட்டென்று கத்தும் போது, எரிகிற நெருப்பில் பெற்றோலை ஊற்றியதை போல ஆகிவிடும்.

எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும், உண்மையாக இருக்க வேண்டும். நாம் கூறும் பொய் அந்த சமயத்திற்கு மட்டுமே தீர்வை இருக்குமே தவிர. காலம் கடந்து அது வெளிப்படும் போது. அதை விட பன்மடங்கு பெரிய விளைவை ஏற்படுத்தும்.

தனித் தனியாக, தங்களது உயர்வை பற்றி பரிசீலித்து செயல்படாமல். ஒற்றுமையாக, இருவரின் உயர்வின் மேலும் அக்கறை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். இது, உங்கள் இல்லற வாழ்க்கையில் மேன்மையை ஏற்படுத்தும்.
பிரச்சனைகளற்ற வாழ்வென்பது, ருசியற்ற உணவு. ஆனால், அதை எப்படி கையாளப் போகிறோம் என்பது முக்கியம். அமைதி அவசியம், என்ன, ஏது என்று எதையும் ஆராயாமல் எடுத்த எடுப்பில் கோபப்படுவதை நிறுத்த வேண்டும். அமைதியாக இருவரும் சேர்ந்து பேசும் போது, பிரச்சனைகள் எவ்வளவு கடினமான இரும்பாக இருந்தாலும் கூட துரும்பாகிவிடும்.

எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும், தினமும் இருவரும் சேர்ந்து பேச சிறிது நேரம் ஒதுக்குதல் அவசியமாகும். இது சரியாக நடந்தாலே, பெரும்பாலும் பிரச்சனைகள் ஏற்படாது வாழ்க்கை இன்பமாக அமையும்.
பிரியாத நிலை தான் உறவில் பிரியத்தை அதிகரிக்க செய்யும். எனவே, எந்த சூழ்நிலையிலும் ஒருவரை இருவர் பிரியாமல் இருக்க வேண்டும்.

உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் எளிதாக உச்சமடைந்து விடுவார்கள். ஆனால், பெண்கள் உச்சமடைவதற்கு தான் கொஞ்சம் தாமதம் ஆகும். இது மனித வாழ்வியலில் இயற்கையான ஒன்று தான். இதற்கு ஒரே தீர்வு ஆண்களிடம் தான் இருக்கிறது.பெண்களின் அந்தரங்க பகுதிகளில் விளையாடுதல் அவர்களை உடலுறவில் உச்சமடைய வைக்க உதவும். ஆனால், ஓர் ஆராய்ச்சியில் இயற்கையாகவே பெண்களும் உச்சமடைய ஓர் எளிய வழிமுறையினை கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவில் இருக்கும் மிச்சிகன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், நன்கு ஓய்வெடுக்கும் இல்லத்தரசிகள் உடலுறவில் நல்ல உச்சமடைகின்றனர் என்று கூறப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கிடையே நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், யாரெல்லாம் நன்கு உறங்குகிறார்களோ, அவர்கள் எல்லாம் மறுநாள் உறவில் ஈடுபடும் போது நல்ல உச்சம் காண்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக பெண்கள் தூங்குவதை விட ஒரு மணி நேரம் அதிகமாக தூங்குவதனால், 14% வரை அவர்கள் மறுநாள் உடலுறவில் ஈடுபடும் போது உச்சம் காண்கிறார்களாம்.

பெரும்பாலும் பெண்கள் உடலுறவில் இயற்கையாக உச்சம் காண மாட்டார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், நல்ல ஆழமான, அமைதியான உறக்கம் இயற்கையாகவே பெண்கள் உச்சமடைய உதவுகிறதாம்.

ஆண்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் இருந்தால் விறைப்புத்தன்மை அதிகரிப்பது போல, பெண்களுக்கு நல்ல ஓய்வும், உறக்கமும் இயற்கையாக உச்சமடைய உதவுகிறது என்று கூறியிருக்கின்றனர்.
இதே ஆராய்ச்சியில், நல்ல ஓய்வும், உறக்கமும் இல்லாத ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக கூறியிருக்கின்றனர்.

கருத்துரையிடுக

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget