காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும். முழுவதுமாக ஆளும் முன் சில சந்தோச விளையாட்டுக்கள் விளையாடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சில நிமிடங்களில் முடிந்து போகக்கூடியதல்ல காம விளையாட்டு. எப்பொழுது தொடுவான்? எங்கே தொடங்குவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மூலம் சிலிர்க்கச் செய்யுங்கள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மேற்கொண்டு படியுங்களேன்!
ஏங்க வையுங்க
தம்பதியரிடையே அன்றைய தினம் ஸ்பெசல் என்றால் அதற்கான ஆயத்தபணிகளை காலையிலேயே தொடங்கி விடுங்கள். ஒருவித எதிர்பார்ப்போடு இருக்கும் துணையை ஏங்கவைத்தால் அது சுவையை அதிகரிக்கும்.
உதட்டில் உரசல்
அதிகம் உணர்வு நிறைந்த இடம் உதடு. முன்விளையாட்டில் முக்கிய இடம் உதட்டுக்கு உண்டு. சின்னதாய் உரசல்ஸ மயிலிறகால்.. சுண்டு விரலால் ஒரு ஸ்பரிசம் என தொடங்கினால் காதல் நெருப்பு பற்றிக் கொள்ளுமாம்.
காது மடல்
காது மடல் காமத்தை தூண்டும் முக்கிய இடமாகும். அங்கே செல்லமாய் கடித்து உங்கள் துணையை சொக்க வைக்கலாம்.
கழுத்தின் பின்புறம்
கழுத்தின் பின்புறத்தில் உணர்வு நரம்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கே சின்னச் சின்னதாய் தடவல்கள்ஸ அது விரலோ, இல்லை மெல்லிய இறகோ கொண்டும் செய்யும் செயல்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுமாம்.
மூக்கு நுனி
சிலரின் மூக்கு பார்த்தலே கிளர்ச்சியைத் தரும். துணையின் மூக்கு நுனியை லேசாய் கடியுங்கள். கன்னக் கதுப்பில் மெதுவாய் முத்தமிடுங்கள் இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்குமாம்.
மசாஜ் விளையாட்டு
தம்பதியரிடையே மசாஜ் செய்வது முக்கியமான முன்விளையாட்டு என்கின்றனர் நிபுணர்கள். உணர்வுக்குவியலாய் இருக்கும் துணையை அங்கங்கே தொட்டு, தடவி செய்யும் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும்.
தொடமல் தொடுங்கள்
சில சமயம் விரல்களால் தொடுவதை விட சில பொருட்கள் உணர்வுகளை கிளறிவிடும். நெருக்கமாய் அமர்ந்து காது மடலில் விடும் மூச்சுக்காற்றுஸ மெல்லிய கர்ச்சிப்பினால் உடல் முழுவதும் போடும் கோலம்ஸ என சந்தோச செயல்பாடுகளால் தொடாமல் தொடுங்கள்.
சிலிர்க்கச் செய்யுங்கள்
முதுகு தண்டுவடம் அதீத உணர்ச்சிகளை கொண்டது. ஒவ்வொரு முடிச்சையும் தொடுவதன் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதுவும் ஒற்றை விரலால் கொடுக்கும் அழுத்தம் உடலை காற்றில் பறக்கச் செய்யுமாம்.
மெதுவாய்ஸ மெதுவாய்ஸ
கால் தொடை பகுதியில் உள்ள முக்கிய நரம்புகளை தூண்டிவிடுவதன் மூலம் உற்சாகம் ஏற்படும் என்கின்றனர். மசாஜ் செய்யும் போது கால்களில் மெதுவாய் செய்துவிடும் மசாஜ் மூலம் சிலிர்க்கச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
செக்ஸ் டிப்ஸ்
திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது.யார் மூலமாகவோ கிடைக்கிற அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன. இதனாலேயே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது.
அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்ஸ.
முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது.
இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில் ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம்.
முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள் ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும்.
அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.
சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
உறவை பலப்படுத்தும்.
எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக்கு இடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை
கருத்துரையிடுக